என்னுடைய ஒத்தையடிப் பாதையை சாலையாக மாற்றியுள்ளனர் – இளம் இயக்குனர்கள் குறித்து பாரதிராஜா பெருமிதம்

சினிமாவில், தான் போட்ட ஒத்தையடிப் பாதையை, தற்போதுள்ள இளம் இயக்குனர்கள் சாலையாக மாற்றிவிட்டதாக இயக்குனர் பாரதிராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில், பரியேறும் பெருமாள் படத்தின் மதிப்பாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், ராம், அமீர், கவுதமன் மற்றும் பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, பரியேறும் பெருமாள் படத்தை பார்க்கும் போது, படத்தின் இயக்குனர் வாழ்ந்த வாழ்க்கையின் வலி தெரிவதாக கூறினார். கனவுகளை அப்படியே படமாக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதாக கூறிய அவர், தான் இன்னும் மாரி செல்வராஜை தாண்டவில்லை என்று குறிப்பிட்டார். தான் போட்ட ஒத்தையடிப் பாதையை, தற்கால இளம் இயக்குனர்கள் சாலையாக மாற்றிவிட்டதாகவும் அவர் பெருமிதத்தோடு தெரிவித்தார்.

 

Exit mobile version