தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல்

திருவண்ணாமலை அருகே 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தச்சம்பட்டு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த ஒரு காரை, மடக்கி சோதனையிட்டனர். அப்போது வாகனத்திற்குள் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து காரை கைப்பற்றிய காவல்துறையினர் தச்சம்பட்டு காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றனர். மேலும் காரில் இருந்த இருவரிடம் விசாரணை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காரில் இருந்த போதைப் பொருட்களின் மொத்த மதிப்பு 10 லட்சம் ரூபாய் இருக்கும் என்றும், அவைகள் எங்கு இருந்து, எங்கு கடத்தப்பட்டது என்பது குறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version