வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய போராட்டம்

கிராம வங்கிகள் இணைப்பு முடிவுகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தால் பரிவர்த்தனையில் பாதிப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அதிகாரிகளுக்கு இணையாக, வங்கி அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும், தேசிய வங்கிகள் இணைப்பு, கிராம வங்கிகள் இணைப்பு முடிவுகளை கைவிட வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய போராட்டம் இன்று நடைபெறுகிறது. அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர், நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், காசோலை பரிவர்த்தனைகளை மேற்கொள்ள, அதற்கான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், காசோலை பரிவர்த்தனைகளில் எந்த பாதிப்பும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Exit mobile version