வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் விடுமுறையால் கடுமையாக பாதிக்கப்படும் வங்கி சேவைகள்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் விடுமுறையால் 5 நாட்கள் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு ஒப்பந்தம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் பணப் பரிமாற்றங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வாரத்தின் 3-வது சனிக்கிழமை என்பதாலும் மற்றும் ஞாயிற்று கிழமை வழக்கமான விடுமுறை என்பதாலும் 22 மற்றும் 23ம் தேதி வங்கிகள் செயல்படாது.

24ம் தேதி மீண்டும் வங்கிகள் செயல்படும். இதனை தொடர்ந்து 25ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 26-ம் தேதி அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், 24-ம் தேதி ஒருநாள் தவிர, 5 நாட்களும் பணம் டெபாசிட், காசோலை பரிவர்த்தனை, பணம் எடுத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version