வங்கி கொள்ளை எதிரொலி: லாக்கரில் உள்ள உடமைகளை எடுத்துச் செல்லும் மக்கள்

வங்கியின் லாக்கரை உடைத்து பணம் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்ததைத் தொடர்ந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் லாக்கரிலிருந்து தங்கள் பொருட்களை திரும்ப எடுத்துச் சென்றனர். திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை அமைந்துள்ளது. நேற்று இவ்வங்கியின் லாக்கரை உடைத்த கொள்ளையர்கள் நகை, மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் 300க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் லாக்கரில் வைத்திருந்த தங்கள் பணம், நகை மற்றும் முக்கிய ஆவணங்களை திரும்ப எடுத்துச் சென்றனர்.

Exit mobile version