அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினர் வீட்டை வங்கி அதிகாரிகள் சீல் வைத்தனர்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினர் தாரகை, தேசிய வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதால் போலீசார் உதவியுடன் அவரது வீட்டை வங்கி அதிகாரிகள் சீல் வைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் வசித்து வரும் தாரகை என்பவர், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் சில வருடங்களுக்கு முன் தேசிய வங்கியில் தொழில் தொடங்குவதாக கூறி 3 கோடியே 76 லட்சம் ரூபாயை கடனாக பெற்றுள்ளார்.

வாங்கிய கடனை வாங்கியது முதலே செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வங்கியின் சார்பில் பணத்தை திருப்பி செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அவர் அலட்சியப்படுத்தி வந்ததால் போலீசார் உதவியுடன் வங்கி அதிகாரிகள் அவரது வீட்டை சீல் வைத்தனர்.

Exit mobile version