என்னுடைய மனைவியை கொலை செய்ய போகிறேன் எனக்கு விடுமுறை வேண்டும் – பிரதமருக்கு கடிதம் எழுதிய வங்கி மேலாளர்

என்னுடைய மனைவியை கொலை செய்ய போகிறேன், எனக்கு விடுமுறை வேண்டும் என்று கடிதம் எழுதிய பீகாரை சேர்ந்த வங்கி ஊழியர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முன்னா பிரசாத். இவர் வசிக்கும் அதே பகுதியில் உள்ள தக்ஷின் பீகார் கிராமீன் வங்கியின் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவிக்கு சிறுநீரக பிரச்சனை இருப்பதால் வாரம் இருமுறை இவர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக அவர் அடிக்கடி விடுமுறை எடுத்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஆண்டில் குறிப்பிட்ட விடுமுறைகள் மட்டுமே உள்ளதால் அவரது விடுமுறை தினங்கள் முடிந்து விட்டதாக வங்கி நிறுவாகம், தொடர் விடுமுறை வழங்க மறுத்துள்ளது.

இதனால் கோபம் அடைந்த அவர் தனது மனைவியை கொலை செய்து இறுதி சடங்கு நடத்த விடுமுறை வழங்குமாறு வங்கி மேல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

மேலும், அதன் நகலை பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவலகம், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

அதிர்ந்து போன வங்கி நிறுவாகம் அவருக்கு உடனடியாக விடுமுறை வழங்கி உள்ளது.

Exit mobile version