சொகுசு கார் வாங்க கடன் கொடுத்ததில் மோசடி – வங்கி மேலாளர் கைது

சென்னையில் சொகுசு கார்கள் வாங்குவதற்காக கடன் பெற்று மோசடி செய்த கும்பலுக்கு உடந்தையாக இருந்த வங்கி மேலாளர் வெங்கட்ராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மண்டல யூனியன் வங்கியின் மேலாளராக இருப்பவர் வெங்கட்ராமன். இவர் 2013ம் ஆண்டு சென்னை வேளச்சேரியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாளராக இருந்த போது, சொகுசு கார்களுக்கான கடன் அளிப்பதில் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வெங்கட்ராமனை கைது செய்தனர். வங்கி மேலதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்துள்ள காவல்துறையினர், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கடன்பெற்று மோசடி செய்தது தொடர்பாக பிரபல கார் பந்தய வீரர் விஜய், முகமது முசாமில், அய்யாத்துரை ஆகியோரும், போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்தது தொடர்பாக இரண்டு பேர் உட்பட 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version