18 உறுப்பினர்களுக்கான நகர வங்கி தேர்தல்: திமுகவினர் கள்ள வாக்கிடுவதைக் கண்டித்த அதிமுகவினர்

கூட்டுறவு நகர வங்கியில் நிர்வாக இயக்குநர்களுக்காக நடத்தப்பட்ட தேர்தலில், திமுகவினர் கள்ளத்தனமாக வாக்களித்ததால், தேர்தலை ரத்து செய்து தேர்தல் அலுவலர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சின்ன காஞ்சிபுரத்தில் கூட்டுறவுநகர வங்கி உள்ளது. இதில் 18 உறுப்பினர்களுக்கான காலியிடங்களுக்கான தேர்தல், சிலப் பிரச்னைகளால் நிறுத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் நிர்வாக இயக்குநர்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் திமுக உறுப்பினர்கள் தொடர் அராஜகம் செய்து போலி வாக்குச் சீட்டு மூலம் வாக்களித்தனர். இதனை அதிமுக உறுப்பினர்கள் கண்டித்ததால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆகையால் இப்பகுதியில் தேர்தல் நிறுத்துவைக்கப்பட்டதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த திமுகவினர் காவல்துறையினர் மற்றும் தேர்தல் அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்து பின்னர் கலைந்து சென்றனர்.

Exit mobile version