வங்கி மோசடியாளர் பட்டியலை வெளியிட முடியாது – பிரதமர் அலுவலகம் மறுப்பு

கோடிக்கணக்கில் வங்கி மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்த ரகுராம் ராஜன் பட்டியலை வெளியிட முடியாது என பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வாராக்கடன் குறித்து ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனிடம் பா.ஜ.க. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற மதிப்பீட்டு நிலைக்குழு விளக்கம் கேட்டிருந்தது. அதற்கு ரகுராம் ராஜன் விரிவான பதிலை கடந்த மாதம் அளித்திருந்தார்.

மேலும் கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர்கள் குறித்த பட்டியலையும் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் அலுவலகத்துக்கு ரகுராம் ராஜன் அனுப்பிய மோசடி செய்த நபர்கள் பட்டியல், அவர்கள் மீது பிரதமர் அலுவலகம் எடுத்த நடவடிக்கை உள்ளிட்டவற்றை தகவல் அறியும் சட்டம் மூலம் முரளி மனோகர் ஜோஷி கேட்டிருந்தார்.

ஆனால், இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி இது தொடர்பான தகவல்களை வெளியிட முடியாது என்று பிரதமர் அலுவலக செயலர் மற்றும் மத்திய பொது தகவல் அலுவலர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார். இந்த தகவல் விசாரணை பாணியில் இருப்பதால் ஆர்.டி.ஐ சட்டப்படி இது தகவல் என்ற வரையறையின் கீழ் வராது என்று அவர் கூறியிள்ளார்.

Exit mobile version