வங்கிகளின் வேலை நிறுத்தம் காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது!

வங்கிகளின் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

தனியார் மயமாக்கலை கண்டித்து, வரும் 15 மற்றும் 16ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

இன்று 2வது சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால், இன்று முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை காரணமாக ஏடிஎம் சேவைகளும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

Exit mobile version