பானி புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை கூட்டம்

சின்னசேலத்தில் பானி புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை கூட்டம் நடைபெற்றது. பானி புயலுக்காக, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கூட்டம் கள்ளக்குறிச்சி சார்ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சின்னசேலம் வட்டாட்சியர் மற்றும் குறுவட்ட ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை,பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்

Exit mobile version