பானி பூரி விற்று கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்ட இளைஞர்

மகாராஷ்ட்ரா மாநிலம் தானேயில் பானி பூரி விற்கும் இளைஞர் 18வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தானேயைச் சேர்ந்த யாசவி என்ற இளைஞர் பானி பூரி விற்று அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். மாலையில் பானிபூரி விற்கும் அவர் இரவில் மைதானத்திலேயே படுத்து விடுவாராம். இந்நிலையில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை அணிக்கு யாசவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த வருடம் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் சார்பாக கலந்து கொள்கிறார்.

Exit mobile version