காஷ்மீர் தாக்குதலை கண்டித்து மத்திய பிரதேசத்தில் கடையடைப்பு போராட்டம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தீவிரவாத தற்கொலைப்படை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்ப்டடனர்.

புல்வாமாவில் நடத்தப்பட்ட இந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வியாபாரிகள் இன்று கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அங்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் வணிக வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மக்களின் இயல்புவாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version