மேலூர் அருகே கனமழை பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதம்

மேலூர் அருகே கனமழை காரணமாக பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்தன.

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாக கோடை வெயில் வாட்டி எடுத்த நிலையில், மாலை நேரத்தில் கனமழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது. இந்நிலையில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

இதனால் வெள்ளலூர், குறிச்சிபட்டி, முருகன்பட்டி, உறங்கான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Exit mobile version