சூறாவளிக்காற்றில் சிக்கி வாழை மரங்கள் சேதம்

மேட்டுப்பாளையத்தில் சூறாவளி காற்றில் சிக்கி ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சிறுமுகை, பகத்தூர், அன்னதாசம்பாளையம், இடுகம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் வீசிய சூறாவளியில் சிக்கி, பல ஏக்கர் பரப்பளவில் சுமார் ஜம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமாகின. அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சேதமானதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version