வாழை மரம் கட்டி, பன்னீர் தெளித்து வாக்களர்களுக்கு வரவேற்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி வாக்குச் சாவடியில் வாழை மரம் கட்டி, பன்னீர் தெளித்து வாக்காளர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

100 சதவீதம் வாக்களிப்பு என்பதை முன்வைத்து வாக்காளர்களை கவரும் விதமாக தேர்தல் ஆணையம் சார்பில் இந்த ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது. திருமண நிகழ்ச்சிக்கு வரவேற்பு அளிப்பதுபோல் அரங்கேற்றப்பட்ட இந்த நிகழ்வு பராட்டும் வகையில் அமைந்தது. இதனால் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்கள் மகிழ்ச்சியுடன் வாக்களித்து சென்றனர்.

Exit mobile version