வாழைத்தார்கள் அதிக விலைக்கு விற்பனை : விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார்கள் அதிக விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் சாகுபடிக்கு அடுத்த படியாக வாழை சாகுபடி செய்து வருகின்றனர். இதில் செவ்வாழை, கதளி, தேன்வாழை, பூவாழை, நேந்திரன், என பல்வேறு ரக வாழைகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அறுவடை செய்த வாழைத்தார்களை கோபி செட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெறும் ஏலத்தில் விற்பனை செய்தனர். இதில் செவ்வாழை தார் ஒன்று 800 ரூபாய் வரை விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Exit mobile version