திருச்சியில் கொரோனா பரிசோதனை முடிவுகளை தவறாக வெளியிட்ட தனியார் பரிசோதனை மையம் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி உறையூர் பகுதியில், செயல்படும் தனியார் பரிசோதனை மையம் கூடுதல் பணம் வசூல் செய்வதுடன், தனியார் மருத்துவமனைகள் பயன்பெறும் வகையில், பரிசோதனை முடிவுகளை மாற்றி வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இங்கு, கொரோனா பரிசோதனைக்காக சென்ற பலருக்கு, நோய் தொற்று இருப்பதாக தவறான பரிசோதனை முடிவுகள் அளிக்கப்பட்டன. இப்பரிசோதனை மையத்தில் கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கு, அரசு மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் நோய் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக இம்மையத்துக்கு 5 நாட்கள் தடை விதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் புகார் எழுந்தது. இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை, பரிசோதனை மையம் இயங்க தடை விதிப்பதாக திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பரிசோதனை முடிவுகளை தவறாக வெளியிட்ட பரிசோதனை மையத்திற்கு தடை!
-
By Web Team

- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
- Tags: coronaCoronaTestFakeResultnewsjtrichy
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023