பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

கொரோனா காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கிளப்கள், பார்கள், கேளிக்கை விடுதிகள் இரவு நேரத்தில் இயங்க ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூரு நகரில் இன்றுமுதல் நாளை காலை 6 மணிவரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ரிசார்ட்டுகள் மற்றும் உணவகங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் உள்ள மதுபான கடைகள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல பஞ்சாபிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சலில் முக்கிய சுற்றுலா பகுதிகளான சிம்லா, மண்டி, கங்க்ரா, குல்லுவில் இரவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர், ராஜஸ்தான், உத்தராகண்ட், ஒடிசாவிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version