தமிழகத்தில் மது விற்பனைக்கு இன்று தடை

மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தையொட்டி, தமிழகத்தில் இன்று மது விற்பனைக்கு தடை விதித்து,உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மதுக்கடைகளை மூடுவது தொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், காந்தி நினைவு நாளான இன்று மது விலக்கு நாளாக அறிவித்து, தமிழகம் முழுவதும், மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும், பார்கள், ஓட்டல்கள் உள்ளிட்டவைகளில் மது விற்பனைக்கு தடை விதித்தும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

Exit mobile version