உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மாயாவதி மீதான தடை நீங்கியது

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் மீதான பிரசார தடை முடிவடைந்த நிலையில் அவர்கள் மீண்டும் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிமீறல்களை மீறும் வகையில் பேசியதால், 72 மணி நேரம் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசாரம் செய்ய கூடாது எனவும் மாயாவதி 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்தும் தேர்தல் ஆணையம் கடந்த செவ்வாயன்று அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி மீதான தடை நீங்கியதால், இன்று முதல் அவர்கள் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளன. முலயாம் சிங் யாதவுடன் பீகாரின் மெயின்பூரில் மாயாவதி பிரசாரம் மேற்கொள்கிறார். யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேசத்தில் 4 பொதுக்கூட்டங்களில் இன்று பங்கேற்று பேசுகிறார்.

Exit mobile version