பாலாகோட் தாக்குதல் : வெளிநாட்டு தூதர்களிடம் இந்தியா விளக்கம்

பாலாகோட் தாக்குதல் குறித்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாட்டுகளின் தூதர்களிடம் இந்திய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் பாலாகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் தீவிரவாத பயிற்சி முகாமின் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதனால் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்தநிலையில் சர்வதேச அளவில் ராஜாந்திர நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் இந்தியாவுக்கான தூதர்களிடம் பாலாகோட் தாக்குதல் குறித்து இந்திய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

Exit mobile version