மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு-மாயாவதி

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய சூழலில் பாஜக குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.மத்திய பிரதேசத்தில் இருந்து பாஜகவை அகற்றுவதற்காகதான் நாங்கள் போட்டியிட்டோம். ஆனால் துரதிருஷ்டவசமாக எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், தற்போதைய சூழலில் பாஜக குறுக்குவழியில் ஆட்சியமைக்க முயன்றுவருவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை தடுக்கும் விதமாக ஜனநாயகத்திற்கு ஆதரவாகவும், மக்களின் நலனை கருத்தில்கொண்டும் காங்கிரஸ் கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளது.

இதனிடையே மத்திய பிரதேசத்தில் காங்கிரசை ஆதரிப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் ஒரு இடத்தில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

Exit mobile version