நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக் கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் போராட்டம்!

புதுச்சேரியில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக் கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் அலுவல வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோவில் 500-க்கும் மேற்பட்ட ஊழிர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 32 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனை கண்டித்து பாப்ஸ்கோ தலைமை அலுவலகத்தை முற்றுக்கையிட்ட 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இந்த சுழலில் சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் எனவும், இல்லையெனில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version