அயோத்தி மறு ஆய்வு மனுக்கள் மீது இன்று விசாரணை

அயோத்தி வழக்கின் மறு ஆய்வு மனுக்கள் மீது உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

நீண்ட காலமாக நீடித்து வந்த அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி, அண்மையில் உச்சநீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. மேலும், இந்த தீர்ப்பில், மசூதி கட்டுவதற்கு என, இஸ்லாமியர்களுக்கு தனியாக 5 ஏக்கர் நிலம் வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பிற்கு நாடு முழுவதிலும், மத வேறுபாடு இல்லாமல், அனைத்து தரப்பினரிடமிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், இந்த தீர்ப்புக்கு அதிருப்தி வெளியிட்ட சில அமைப்பினர், தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இது தொடர்பான விசாரணை, உச்சநீதிமன்றத்தில், நீதிபதிகள் அறையில் இன்று நடைபெற உள்ளது.

Exit mobile version