அயோத்தி வழக்கை அக்.18-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

அயோத்தில் உள்ள நிலத்தின் மீதான உரிமை விவகாரத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டு சமரச பேச்சுவார்த்தைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் அயோத்தி வழக்கு முடியாத நிலையில் தினந்தோறும் வழக்கு மீதான விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நாள்தோறும் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கினை அடுத்த மாதம் 18 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது அயோத்தி வழக்கை ஏற்கனவே குறிப்பிட்ட தேதிக்குள் கட்டாயம் முடிக்க வேண்டும் என வழக்கை விசாரிக்கும் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் தலைமை நீதிபதி கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தார்.

Exit mobile version