சென்னையில் தலைக்கவசம் அணிய துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு

சென்னையில் பல்வேறு இடங்களில் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி, போக்குவரத்து துணை ஆணையர் தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சென்னை கிண்டி, பரங்கிமலை, ஜி.எஸ்.டி.சாலை, வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், போக்குவரத்து காவல்துறையினர், தலைக்கவசம் அணியுமாறு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். அப்போது, தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கும், ஹெல்மெட் அணிந்து வாகனத்தை ஓட்டியவர்களுக்கும் பிஸ்கெட் வழங்கி, போக்குவரத்து காவல்துறையினர் உற்சாகப்படுத்தினர். போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து, விபத்துக்கள் இல்லாமல் வாகனம் ஓட்ட வலியுறுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், போக்குவரத்து துணை ஆணையர், அடையார் போக்குவரத்து உதவி ஆணையர், பரங்கி மலை ஆய்வாளர், கிண்டி ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Exit mobile version