வடலூரில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு

கடலூர் மாவட்டம், வடலூரில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரசாரம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வடலூரில் சனிக் கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இதனையொட்டி, அங்கு மக்கள் அதிக அளவில் வந்து செல்வதால், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு 100 சதவீத வாக்கு பதிவு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

விழிப்புணர்வு பிரசாரத்தை கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் தொடங்கி வைத்தார். சுமார் 500 மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு மனித சங்கிலியும் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தேர்தல் பிரிவு அதிகாரிகள், அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version