பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட விழிப்புணர்வு

பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட, இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ள ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் மூலமாக ஏற்படும்   உயிரிழப்புகளை தடுக்க, சிவாஜி என்ற ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர், தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனத்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார். கடந்த 25ம் தேதி கரூரில் தனது விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கிய இவர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைக் கடந்து  ஈரோடு மாவட்டத்திற்கு வந்தடைந்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதும், அம்மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். தள்ளாடும் வயதிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இவர் மேற்கொண்டுள்ள விழிப்புணர்வு பிரசாரம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

Exit mobile version