தலைக்கவசம் அணியாதவர்களுக்கு நூதன முறையில் விழிப்புணர்வு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகனம் ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் நூதன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்

அதன்படி ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் எமதர்மராஜன் வேடமணிந்து வந்தவர்கள் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்களின் மீது தன்னுடைய பாசக்கயிற்றை வீசிய எமதர்மன் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கினார். இந்த நிகழ்ச்சியை வியப்புடன் பார்த்த வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்ட மாட்டோம் என உறுதியளித்தனர். இந்நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.

Exit mobile version