ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

சேலத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஹெல்மெட் வடிவில் நின்று மாணவிகள் உலக சாதனை படைத்தனர்.

சேலத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஒரே நேரத்தில் நான்காயிரத்து 50 மாணவிகள் ஹெல்மெட் வடியில் உட்கார்ந்து கொண்டு ஒரு உலக சாதனையும்,நின்று கொண்டு ஒரு உலக சாதனையும் என இரண்டு உலக சாதனைகளை படைத்தனர். நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் சங்கர்,பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கொழந்தவேலு,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Exit mobile version