அந்தியூரில் மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில், கல்லூரி மாணவ, மாணவியர் கோஷங்கள் எழுப்பியும் பதாகைகளை ஏந்தியும் சென்றனர். அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகில் துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இந்தப் பேரணியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர். 

Exit mobile version