சென்னையில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கோட்டாட்சியர் சங்கீதா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி பொதுமக்களிடம் போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் சென்னையில் 3 பள்ளிகளை சேர்ந்த 150 மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை சார்பில் நடைபெற்ற பேரணியை மாவட்ட கோட்டாட்சியர் சங்கீதா கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள், போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்ற முழக்கங்களுடன் பதாகைகளையும் ஏந்தி சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி, பாரிமுனை பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

Exit mobile version