சிதம்பரத்தில் 100சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிதம்பரத்தில், 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி நடைபெற்ற கலை நிகழ்ச்சி மற்றும் சைக்கிள் பேரணியில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன், மாதிரி வாக்குசாவடியில் வாக்குபதிவு குறித்து விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துறைத்தது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து நடைபெற்ற சைக்கிள் பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Exit mobile version