தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என,  காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது. அந்த வகையில் சைதாப்பேட்டையில் தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் சென்னை மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக கல்லூரி மாணவர்கள் நாடகங்கங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Exit mobile version