சென்னையில் நடைபெற்ற காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெண்களின் பாதுகாப்பிற்கான காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கலந்துகொண்டார். காவலன் செயலியின் முக்கியத்துவம் குறித்து மாணவிகள் மத்தியில் எடுத்துரைத்த அவர்,
பெண்களின் பாதுகாப்பிற்காக, காவலன் செயலியை தமிழக அரசு உருவாக்கி உள்ளது என்றும் இதனை மாணவிகள் தங்களது கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவிலேயே பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான பெருநகரமாக சென்னை உள்ளதாக கூறினார். மேலும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சென்னையில் மிக குறைவு என்றும் தெரிவித்தார்.

Exit mobile version