கோடை காலத்தில் பறவைகளை காப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் ஆவணத்தாங்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கோடை காலத்தில் பறவைகளை காப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆவணத்தாங்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள், அப்பகுதியிலுள்ள பெற்றோர்கள் மற்றும் பொது மக்களை வரவழைத்து கோடை காலத்தில் பறவைகளின் நிலைப்பாடு குறித்து விழிப்புணர்வை நிகழ்ச்சி நடத்தினர். மேலும் தங்களின் வீட்டருகே பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் சிறு தானியங்கள் வைப்பதை, நிகழ்ச்சி வாயிலாக அறிவுறுத்தினர். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version