உலக புற்றுநோய் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

 உலக புற்றுநோய் தினத்தையொட்டி, இந்திய மருத்துவ சங்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அண்ணா நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் பொதுமக்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தினர் இணைந்து புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபயணம் மேற்கொண்டனர். சென்னை மாநகர காவல்துறை மேற்கு இணை ஆணையர் விஜயகுமாரி கலந்து கொண்டு விழிப்புணர்வு நடைபயணத்தை தொடங்கி வைத்தார். புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபயணத்தில் பங்கேற்றவர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி சென்றனர்.

Exit mobile version