மாணவர்களிடையே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னையில், மாணவர்களிடையே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

சென்னை, திருவொற்றியூர் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களிடையே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிளை நூலக வாசகர் வட்டத்தினர் மற்றும் அரசு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியினால் பள்ளி மாணவ-மாணவிகள் நூலகம் சென்று தங்கள் அறிவை, வளர்த்துக் கொள்ளவும் அங்குள்ள புத்தகங்களை வாசித்து தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்ள இந்த நிகழ்ச்சி பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் ஆயிரத்து 300 பேர் 1 மணி நேரம் புத்தகம் வாசித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Exit mobile version