விபத்துகளை தடுக்கும்முயற்சியாக பெட்ரோல் பங்கில் விழிப்புணர்வு

திருச்செந்தூர் பகுதிகளில் சாலை விபத்துகளை தவிர்க்கும் முயற்சியாக 18 வயது நிரம்பாதவர்களுக்கு பெட்ரோல்- டீசல் வழங்கப்படமாட்டாது என்ற காயல் பியூல்ஸ் பெட்ரோல் பங்கின் முடிவுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டிணம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சாலை விபத்துகள் நடைபெற்றுவருவதாகவும், இதில் இளைஞர்கள் அதிகளவில் உயிரிழப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், சாலை விபத்துகளை தடுக்கும் முயற்சியாக, அப்பகுதியில் உள்ள காயல் பெட்ரோல் பங்கில், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பெட்ரோல்-டீசல் வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல் பங்க் பணியாளர்களும், பெட்ரோல் நிரப்ப வரும் வாகன ஓட்டிகளிடம் 18 வயது நிரம்பியுள்ளதா எனவும் மக்களவை தேர்தலில் வாக்களித்தமைக்காக கைவிரலில் வைக்கப்படும் அடையாள மையினை சரிபார்த்தும் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புகின்றனர். பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் இந்த முடிவுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Exit mobile version