மக்களுக்கு பல்வேறு நோய்கள் குறித்து மாதம் இரு முறை விழிப்புணர்வு

மக்களின் ஆரோக்கியத்தை காப்பதற்காக பல்வேறு நோய்கள் குறித்து மாதம் இரு முறை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்வலைகழகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அப்பல்கலைகழகத்தின் துணை வேந்தர் சுதா சேஷய்யன்,முன்னாள் துணை வேந்தர் சாந்தாராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை வேந்தர் சுதா சேஷய்யன், மருத்துவ பல்கலைகழகத்திற்கு மக்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு உண்டு, மக்களுக்கு ஆரோக்கியத்தில் எழும் பல்வேறு சந்தேகங்களை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தீர்க்க உள்ளதாக கூறினார்.

Exit mobile version