அடையாறு, கூவம் நதிகளின் தூய்மை குறித்த விழிப்புணர்வு

அடையாறு, கூவம் நதிகளின் தூய்மை குறித்த விழிப்புணர்வை மையப்படுத்தி சென்னையில் படகு போட்டி நடைபெற்றது.

சென்னை அடையாறு புரோக்கன் பிரிட்ஜ் பகுதியிலிருந்து மெட்ராஸ் போட் கிளப் வரை மூன்றரை கிலோ மீட்டர் தொலைவிற்கு படகு போட்டி நடைபெற்றது. 4 பிரிவுகளில் நடைபெற்ற ரோவிங் எனப்படும் படகு போட்டியில் 32 படகுகளில் 120 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. அடையாறு, கூவம் மற்றும் கொசஸ்தலை ஆகிய ஆறுகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த போட்டியை நடத்தியதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version