வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் 100% வாக்களிக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு

வேலூர் தொகுதியில் அனைவரும் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், வேலூர் தொகுதிக்கு தேர்தல் நிறுத்தி வைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், வாக்களர்கள் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு செய்யப்பட்டது.

இதனை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் வாகன விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேளதாளங்களுடன் நாட்டுபுற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Exit mobile version