சென்னையில் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக சாலையில் வண்ண கோலங்கள் தீட்டி விழிப்புணர்வு

தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் கோலப்போட்டி நடைபெற்றது. 17வது மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வடசென்னை தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர் தொகுதியில் மண்டல அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்குச்சாவடி இயந்திரங்களை ஓவியமாக வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாக்களிப்பது தொடர்பாக சாலையில் வண்ண வண்ண கோலங்கள் வரையப்பட்டன. இதில், ஏராளமான பெண்கள் பங்கு பெற்று கோலங்களை தீட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Exit mobile version