மின்னணு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது என விழிப்புணர்வு

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பொதுமக்களுக்கு மின்னணு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.

இராமநத்தம் மற்றும் தொழுதூர் அரசினர் மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில், மங்களூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜாராமன் , உதவி தோட்டக்கலை அலுவலர் செல்வக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் பொது மக்களுக்கு வாக்கு பதிவு இயந்திரம் பற்றிய விழிப்புணர்வு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

Exit mobile version