கிராமப்புற மாணவர்களுக்கு விழிப்புணர்வு – ரோபோட்டிக் தொழில்நுட்பம் குறித்து விளக்கம்

கிராமப்புற மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விருதுநகரில் ரோபோட்டிக் ப்ரோகிராமிங் தொழில்
நுட்பம் பற்றி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

விருதுநகர் சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரோபோட்டிக் தொழில்நுட்பம் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. வருங்காலத்தில் ரோபோட்டிக் எனப்படும் தொழில்நுட்பம் அபரித வளர்ச்சி அடையும் என்பதால்,கிராமப்புற மாணவர்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதன் மூலம் வெளிநாடு, நகர்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கும் தொழில் நுட்பம் சார்ந்த திறன், கிராமப்புற மாணவர்களுக்கும் எளிதாக புரியும் வகையில் ரோபோட்டிக் மற்றும் அதன் தொழில் நுட்பம் பற்றி எடுத்துக் கூறப்பட்டது.

Exit mobile version