கரூரில் கலைப்பண்பாட்டுத் துறை சார்பாக விருதுகள் வழங்கும் விழா

கலைப்பண்பாட்டுத் துறை சார்பாக மண்ணின் கலை விழா மற்றும் மாவட்ட கலை விருதுகள் வழங்கும் விழா கரூரில் நடைபெற்றது.

இந்த விழாவில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். உலக நாட்டிய தினம், சர்வதேச ஒவியர் தினம், உலக நாடக தினம் ஆகியவை இந்த நிதியாண்டில் கொண்டாடப்பட உள்ளதாக நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. விழாவில் 40 கலைஞர்களுக்கு 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான இசைக்கருவிகள் வழங்கப்பட்டன. இதேபோல், கலைமுதுமணி, கலைநன்மணி உள்ளிட்ட விருதுகள் வழங்கி 25 கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

Exit mobile version