குடும்ப நலத்துறை சார்பில் சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் சிறந்த மருத்துவர் விருது வழங்கும் விழா, சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, மருத்துவக் கல்வி இயக்குனரகம், உட்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 20 மருத்துவர்களுக்கு, விருது மற்றும் 50 ஆயிரம் ரூபாய் சிறப்பு பரிசுத்தொகையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ஐந்து மருத்துவ பிரிவின் கீழ் 497 மருத்துவர்களுக்கு, சிறந்த மருத்துவர்களுக்கான விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆண்டு வரை 10 மருத்துவர்களுக்கு வங்கப்பட்டு வந்த பரிசுத் தொகை, இந்த ஆண்டு முதல் 20 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version