அவனியாபுரத்தில் ஜல்லிகட்டு போட்டியை தை 1-ம் தேதி நடத்த கிராம சபையில் தீர்மானம்

மதுரை அவனியாபுரத்தில் தை 1-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கிராம சபை கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தை 1-ம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அவனியாபுரம் கிராம மக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, அவனியாபுரத்தில் கிராம சபை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், அவனியாபுரத்தில் தை 1-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும், அவனியாபுரம் பகுதி காளைகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கிராம மக்கள் ஒருமனதாக கையெழுத்திட்டனர்.

Exit mobile version